இலங்கையில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு!

இலங்கையில் மருந்து பற்றாக்குறை அபாயக் கட்டத்தை எதிர்நோக்கியுள்ளதாக மருத்துவர்களால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வலி நிவாரணிகள், நீரிழிவு, புற்றுநோய் மற்றும் இதய நோயாளிகளுக்கான மருந்துகள் உட்பட 120க்கும் மேற்பட்ட மருந்துகளுக்கு பற்றாக்குறை நிலவுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனை தீர்ப்பதற்கு அரசாங்கம் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தனியார் மருந்தகங்களில் மருந்துகள் அதிக விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவுவதுடன் அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.

அரசாங்கத்திற்கு மருந்துப் பொருட்களை நன்கொடையாக வழங்கும் செயல்முறைகளும் பல காரணங்களால் தடைப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்