இலங்கையர் இருவர் செய்த மோசமான செயல் : அச்சத்துடன் நாட்டை விட்டு வெளியேறிய பங்களாதேஷ் பிரஜைகள்

கொழும்பு பிரதான வீதியொன்றில் வைத்து பங்களாதேஷ் பெண் ஒருவரை தாக்கி அவரது தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிருலப்பனையில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு அருகில் வைத்தியரான குறித்த பங்களாதேஷ்  பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு சந்தேக நபர் நடைபாதையிலும் அதன் பின்னர் பிரதான வீதியின் நடுவிலும் குறித்த பெண்ணை கடுமையாகத் தாக்குவதை வீடியோ சிசிடிவி காட்சிகள் காட்டுகிறது.

அச்சம் காரணமாக இலங்கையை விட்டு வெளியேறிய பாதிக்கப்பட்ட பெண்ணும் அவரது கணவரும் மின்னஞ்சல் ஊடாக சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்ததை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவில் அனைத்தும் பதிவாகியுள்ளது.