இறைச்சிக்காக வெட்டுவதற்கு கொண்டு சென்ற மூன்று ஆடுகள் மீட்பு

 

இறைச்சிக்காக வெட்டுவதற்கு கொண்டு சென்ற மூன்று ஆடுகள் யாழ்ப்பாணம் நெல்லியடி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

நெல்லியடி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4:00 மணியளவில் குறித்த மூன்று ஆடுகளும் துன்னாலை குடவத்தை பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.

பொலிஸ் சார்ஜன் M.S.H.P ஜெயரத்தின, தலமையிலான பொலிஸ் காஸ்டபிள்களான கு.வினோத், சாருஜன்,  தில்லின உட்பட்ட பொலிஸ் அதிகாரிகள் குறித்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதே வேளை, குறித்த ஆடுகள் தொடர்பில் எந்தவித முறைப்பாடுகளும் நெல்லியடி பொலிஸாருக்கு கிடைக்கவில்லை என்றும்,  உரியவர்கள் தம்முடன் தொடர்பு கொள்ளுமாறும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.