இரு பெண்கள் மீது வாள்வெட்டு தாக்குதல்

யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியில் வீடொன்றுக்குள் சென்ற இனந்தெரியாத சிலர் அங்கிருந்த 24 வயதுடைய யுவதி மற்றும் 65 வயதுடைய அவரது தாயார் மீது வாள்வெட்டு தாக்குதலை நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு இலக்கான இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தனிப்பட்ட பகையே வாள்வெட்டு தாக்குதலுக்கு காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.