இரு நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

தொடர்ந்தும் பெய்து வரும் மழையால் தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 4 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தெதுரு ஓயாவின் 4 வான்கதவுகளும் 2 அடி உயரத்துக்கு திறக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், தப்போவ குளத்தின் 6 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்பாசனத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.