
மே 18 வரை 944 வீதி விபத்துகள்: 1007 பேர் பலி
வருடம் ஆரம்பித்து இதுவரையான காலப்பகுதியில் 944 வீதி விபத்துகளில் 1007 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்தல் மற்றும் கவனக்குறைவாக வாகனம் செலுத்துபவர்களை கண்டறிவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது உள்ளிட்ட வீதி விபத்துகளைக் கட்டுப்படுத்த பொலிஸார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
அதன்படி, ஜனவரி முதலாம் திகதி முதல் மே 18ஆம் திகதி வரை 26,413 மதுபோதையில் வாகனம் செலுத்தியவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.