ஆவா குழு தலைவர் உட்பட இருவர் ஹெரோயின் மற்றும் கைக்குண்டுடன் கைது!

-யாழ் நிருபர்-

ஆவா குழு தலைவர் என அறியப்பட்ட வினோத் என்பவர் உட்பட இருவர், நேற்று செவ்வாய்க்கிழமை, யாழ்.சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆவா குழு வினோத் என்பவர், 2 கிராம் 400 மில்லிகிராம் ஹெரோயினுடனும், அவரது சகா ஒருவர் கைக்குண்டு மற்றும் வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது, இருவரும் வெவ்வேறு இடங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை, பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.