
அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட முதியவர்
-கிண்ணியா நிருபர்-
திருகோணமலை வரோதயர் நகர் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை மனித உடல் அழுகிய நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
திருகோணமலை ஜின்னா நகர் பகுதியில் 70 வயதுடைய முதியவர் ஒருவரை கடந்த 10 நாட்களாக காணவில்லை என உப்பு வெளி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
மேலும் இவ்வாறு காணாமல் போன முதியவரின் சடலமாக இது இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட நிலையில் முதியவரின் மகள் தனது தந்தை என உறுதிப்படுத்தியுள்ளார்.
சடலம் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்துக்கு அனுப்பி பிரேத நடவடிக்கை இடம் பெறவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.