அழகு நிலையத்திற்கு சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றுவந்த பெண் கைது

அளுத்கம பிரதேசத்தில் பெண்கள் அழகு நிலையமொன்றிற்கு தேவையான மின்சாரத்தை சட்டவிரோதமாக பெற்று வந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

அஹுங்கல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடைய பெண்ணொருவரையே மின்சார தனியார் நிறுவனத்தின் மோசடி விசாரணைப் பிரிவினருடன் இணைந்து அளுத்கம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, இவரை களுத்துறை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்