அரச புலனாய்வு சேவைக்கு புதிய பணிப்பாளர் நியமனம்

அரச புலனாய்வு சேவையின் புதிய பணிப்பாளராக பிரதி பொலிஸ்மா அதிபர் தம்மிக்க பிரியந்த குமார நியமிக்கப்பட்டுள்ளார்.

அதன் பணிப்பாளராகக் கடமையாற்றிய மேஜர் ஜென்ரல் சுரேஷ் சாலே நேற்று வெள்ளிக்கிழமை ஓய்வு பெற்றதையடுத்து, இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.