
அரச நியமனம் கோரி ஆளுநர் செயலகம் முன்பாக தனிநபர் போராட்டம்
திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக அரச நியமனம் கோரி பட்டதாரி ஒருவர் இன்று திங்கட்கிழமை தனி நபர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
மாம்பழ வியாபாரி போன்று கோர்ட் சூட் அணிந்து தனிநபர் போராட்டத்தில் தனது பட்டத்துடன் ஈடுபட்டார்.
கிண்ணியாவை சேர்ந்த குறித்த பட்டதாரி அரச துறையில் நியமனத்தை வழங்குங்கள், கலைப் பட்டத்தை இல்லாமல் ஆக்குங்கள் உள்ளிட்ட விடயங்களை முன் வைத்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்தார்.