அம்பாறை திருக்கோவிலில் விவசாய உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு

 

-தம்பிலுவில் நிருபர் ஜே.கே.யதுர்ஷன்-

அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலாளர் T கஜேந்திரனின் அழைப்பின் பெயரில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான W.D வீரசிங்க ஆகியோர் திருக்கோவிலுக்கு நேற்று புதன்கிழமை விஜயம் மேற்கொண்டனர்

இதன்போது விவசாய நவீன மயமாக்கள் திட்டத்தின் கீழ் (ASMP project) ஜம்பு மற்றும் நிலக்கடலை பயிர்ச்செய்கை நடவடிக்கையினை ஊக்குவிக்கும் பொருட்டு ஐரோப்பிய யூனியன் நிதிப்பங்களிப்புடன் செயற்படுத்தப்பட்டு வரும் வேலைத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 20 பயனாளிகளுக்கு விவசாய உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இவ் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திருமதி S நிருபா நிர்வாக உத்தியோகத்தர் T மோகனராஜா கிராம சேவைக்கு பொறுப்பான நிருவாக உத்தியோகத்தர் திரு N கந்தசாமி திட்டத்திற்கான கள உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், பயனாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.