அனுராதபுரம் பகுதியில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் காயம்
அனுராதபுரம் – திரப்பனை, கல்குலம பகுதியில் நேற்று புதன் கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மிஹிந்தலை பகுதியை சேர்ந்த 28 வயதுடையவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டை நடத்தியது சந்தேக நபர் தொடர்பில் இதுவரை தகவல் வௌியாகவில்லை, மேலும் இந்த சம்பவம் குறித்து திரப்பனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.