அந்தரங்க போட்டோவை வெளியிடுவேன் என மிரட்டிய இளைஞர்: சிறுமி தற்கொலை

அந்தரங்க போட்டோக்களை வெளியிடுவதாக இளைஞர் மிரட்டிய நிலையில் 16வயது சிறுமி வீட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

இந்தியா-மும்பையின் அடுக்குமாடி குடியிருப்பில் இரவு நேரத்தில் 16 வயது சிறுமி மாடியில் இருந்து குதித்து மரணமடைந்தார்.

இது தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.

குறித்த சிறுமியின் சகோதரியிடம் விசாரணை மேற்கொண்ட போது, மாலையில் நடைபயிற்சிக்கு சென்ற போது இளைஞர் ஒருவர் வந்து பேசி சண்டையிட்டதாக கூறியுள்ளார்.

இதனை தட்டிக்கேட்ட சிறுமியின் சகோதரி மற்றும் தோழிகளை அந்த நபர் தாக்க முற்பட்டுள்ளார். சிறுமியிடம் வாக்குவாதம் செய்த அந்த இளைஞர் உன்னுடைய அந்தரங்க போட்டோக்களை செல்போனில் பதிவு செய்து வைத்துள்ளேன். அதனை இண்டர்நெட்டில் வெளியிட்டு உன் மானத்தை வாங்கிவிடுவேன் என மிரட்டி சென்றது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டதையடுத்து ஜாதவ் என்ற இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்