அதிகார துஷ்பிரயோகம் : இப்படியும் நடக்கலாம்!

தனது செல்போனுக்காக ஒரு நீர்தேக்கத்தின் ஒட்டுமொத்த தண்ணீரை அரசு அதிகாரி வெளியேற்றிய அதிர்ச்சி சம்பவம் இந்தியாவில் சத்தீஸ்கர் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.

அரசு அதிகாரிகள் தங்கள் தேவைக்காக அதிகாரங்களை பல விதமாக துஷ்பிரயோகம் செய்யும் சம்பங்கள் நாம் கேள்விப்பட்டிருப்போம். அப்படித்தான் சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரு அரசு அதிகாரி பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அங்குள்ள கான்கேர் மாவட்டத்தில் உள்ள கொய்லிபேடா பகுதியின் உணவுத்துறையில் ஆய்வாளராக பொறுப்பு வகித்தவராவார்.

இவர் கடந்த திங்கள் கிழமை விடுமுறை எடுத்து அருகே கேர்கட்டா என்ற நீர்தேக்கத்திற்கு சுற்றி பார்க்க சென்றுள்ளார். அங்கு நீர் தேக்கத்தை பார்த்த ஆர்வத்தில் தனது ஸ்மார்ட் போனில் செல்பி எடுக்கத் தொடங்கியுள்ளார். அப்போது இவரின் செல்போன் நீர் தேக்கத்திற்குள் விழுந்துள்ளது.

தனது ஒரு லட்சம் மதிப்பிலான ஸ்மார்ட்போன் தண்ணீருக்குள் விழுந்ததை அடுத்து பதறிப்போன அவர், அங்கிருந்தவர்களை பிடித்து தேடித் தரக் கூறியுள்ளார். 15 அடி ஆழ நீர்தேக்கத்திற்குள் விழுந்த போனை அங்கிருந்தவர்கள் தேடி பார்க்க முயற்சித்தனர். இருப்பினும் அது பலனளிக்கவில்லை.

அதன்பின்னர், அதிகாரி செய்த காரியம் தான் பெரும் சர்ச்சையை ஏற்படுதியுள்ளது. அந்த அதிகாரி நீர்தேக்கத்தில் உள்ள நீரை எல்லாம் வெளியேற்றி தனது செல்போனை கண்டுபிடித்து எடுத்துக்கொள்ளாலம் என முடிவெடுத்தார். இதற்காக இரண்டு 30HP மோட்டார்களை வரவழைத்து தொடர்ந்து மூன்று நாள்கள் அவற்றை ஓட வைத்து 21 லட்சம் லிட்டர் தண்ணீரை வெளியேற்றியுள்ளார்.

திங்கட்கிழமை மாலை தொடங்கி வியாழக்கிழமை வரை இது நடந்துகொண்டிருந்த நிலையில், அதற்குள்ளாக நீர் மேலான்மை அதிகாரிகளின் கவனத்திற்கு சென்று இந்த செயலை தடுத்து நிறுத்தியுள்ளனர். அதற்குள்ளாக நீர் மட்டம் வெறும் 6 அடியாக குறைந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு முன்னாள் முதலமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ரமன் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்