அணுசக்தி நிலையங்களை சீரமைக்கும் ஈரான்

அமெரிக்க தாக்குதலில் சேதமடைந்த 3 அணுசக்தி நிலையங்களையும் பழுதுபார்க்கும் பணியில் ஈரான் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக போர்டோவில் உள்ள நிலத்தடி அணு நிலையத்தை சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இது தொடர்பான செயற்கைக்கோள் படங்கள் வெளியாகியுள்ளன. அதில் போர்டோ நிலத்தடி அணு சக்தி நிலையம் அமைந்துள்ள மலைப் பகுதியில் பல பணியாளர்கள் இருப்பதை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன.

மேலும் மலை முகட்டுக்குக் கீழே பல வாகனங்கள் நிலத்தடி அணு சக்தி நிலைய வளாகத்துக்கு செல்லும் பாதையில் நிறுத்தப்பட்டிருந்தது. இதன்மூலம் சேதமடைந்த அணு சக்தி நிலையங்களை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரும் பணியில் ஈரான் மும்முரமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.