வெள்ளத்தில் மூழ்கிய வயல் நிலங்கள்

-அம்பாறை நிருபர்-

அம்பாறை டீ.எஸ்.சேனாநாயக்க நீர்த்தேக்கத்தின் ஒரு வான்கதவு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை திறந்து விடப்பட்ட நிலையிலும் இடைவிடாத மழை வீழ்ச்சி காரணமாகவும் வேளாண்மை செய்கை பாதிக்கப்பட்டுள்ளது.

அம்பாறையில் இன்று வியாழக்கிழமை வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்து வருவதால் சில இடங்களில் வெள்ள நீர் தேங்கி காணப்படுகின்றது. இம்மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழை காரணமாக தாழ்நிலங்களும் வயல் நிலங்களும் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை மற்றும் நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சவளக்கடை கமநல சேவை நிலையத்திற்குட்பட்டு செய்கை பண்ணப்பட்டுள்ள பெரும்போக வேளாண்மை செய்கையில் 2000 ஏக்கருக்கும் அதிகமாக செய்கை பண்ணப்பட்டுள்ளன. சவளக்கடை, அன்னமலை, வேப்பயடி, 5ஆம் கொலனி, போன்ற பல்வேறு பகுதிகளில் காணப்படும் வயல் நிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

Minnal24 FM