
வீதியை கடக்க முயன்ற பெண் மீது மோதிய பேருந்து
மாத்தறை – தங்காலை பிரதான வீதியில் குடாவெல்ல பகுதியில் பேருந்து மோதி நேற்று ஞாயிற்றுக்கிழமை பெண் உயிரிழந்துள்ளதாக தங்காலை பொலிஸார் தெரிவித்தனர்.
திக்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடையவரே இதன் போது உயிர் இழந்துள்ளார்.
குறித்த பெண் பேருந்து தரிப்பிடத்திலிருந்து வீதியை கடக்க முற்பட்ட வேளை திக்வெல்லவில் இருந்து தங்காலை நோக்கிப் பயணித்த பேருந்தில் மோதி படுகாயமடைந்த நிலையில் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் தங்காலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்காலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்