விமான விபத்து தொடர்பில் ஆராய விசேட குழு

விபத்துக்குள்ளான விமானப் படைக்கு சொந்தமான பெல் 212 வகையைச் சேர்ந்த ஹெலிகொப்டர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்காக, 09 பேர் அடங்கிய விசேட விசாரணைக் குழுவொன்று விமானப்படைத் தளபதியினால் நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த விமானம் விசேட பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோதே இன்று காலை இவ்வாறு விபத்துக்குள்ளாகியிருந்தது.

விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் விமானிகள் இருவர் மற்றும் விமான பணிக்குழாம் உள்ளிட்ட 12 பேர் விமானத்தில் இருந்துள்ளதாக விமானப்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

விபத்து தொடர்பில் 12 பேரையும் பொலனறுவை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் விமானப் படை வீரர்கள் இருவர் மற்றும் இராணுவ விசேட அதிரடிப்படை சிப்பாய்கள் நான்கு பேர் உள்ளட்டங்கலாக 06 பேர் உயிரிழந்துள்ளதாக விமானப்படை மேலும் தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்