வாக்கெடுப்பு நிலையத்துக்குள் செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளவர்களின் விபரங்கள்

எதிர்வரும் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது வாக்கெடுப்பு நிலையத்துக்குள் செல்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளவர்களின் விபரங்கள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையின் படி, வாக்கெடுப்பு நிலையத்துக்குள் செல்வதற்கு சட்டத்தினால் அனுமதியளிக்கப்பட்டுள்ளவர்களின் விபரங்கள் பின்வருமாறு ;

1. வாக்கெடுப்பு நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்

2. வாக்கெடுப்பு நிலைய பணிக்குழு

3. வாக்கெடுப்பு நிலையத்தில் கடமைகளில் ஈடுபட்டிருக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்கள்

4. தேர்தலில் போட்டிவேட்பாளர்யிடும் வேட்பாளர்கள்

5. வேட்பாளர் சார்பாக முறைப்படி நியமிக்கப்பட்ட வாக்கெடுப்பு நிலைய முகவர்கள்

6. தேர்தல் ஆணைக்குழுவினால் அனுமதி பெற்ற உள்நாட்டு அல்லது வெளிநாட்டு கண்காணிப்பு ஒழுங்கமைப்புகளின் முகவர்கள்

7. தெரிவத்தாட்சி அலுவலரின் அனுமதி பெற்ற அலுவலர்கள்