வயது 35 ஐ கடந்து விட்டது, உரிய வயதில் எமக்கான வேலை வாய்ப்பை தாருங்கள்!

-கிண்ணியா நிருபர்-

பட்டதாரிகளுக்கான நியமனங்களை அரச துறையில் வழங்குங்கள் என திருகோணமலை வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றியம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்

திருகோணமலை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் ஒன்றியத்தின் ஊடக சந்திப்பு கிண்ணியா பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றது

இதன் போதே பட்டதாரிகள் இவ்வாறு தெரிவித்தனர்.

எங்களது வேலையில்லா பிரச்சினையை அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் செவிமடுக்க வேண்டும், இது தொடர்பில் பாராளுமன்றத்தில் பேசுவதற்காக ஊர் பாராளுமன்ற உறுப்பினர்களையும் நாங்கள் நாடி உள்ளோம்.

இந்த அரசாங்கம் மிக விரைவில் எங்களது வேலையில் பிரச்சனையை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இந்தப் பிரச்சினையை சரியான முறையில் தீர்க்கா விடின் வீதிக்கு இறங்கிப் போராடுவோம்.

900-க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் எந்தவிதமான வேலையும் இல்லாமல் வீதிகளிலும், ஏனைய இடங்களிலும் இருக்கின்றார்கள்

வயது 35 கழிந்து விட்டது, எங்களுக்கு சரியான வேலையை பெற்றுத் தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

35 வயதுக்கு பிறகு நிறுவனங்களிலும் உள்ளீர்ப்பு செய்வதற்கு மிகவும் கடினமாகும்

உள்வாரி வெளிவாரி வெளிநாட்டுப் பல்கலைக்கழகம் என எவ்வித பாகுபாடும் இன்றி, எங்களுக்கு வேலை வாய்ப்பினை பெற்று தருமாறு கோரிக்கை விடுக்கின்றோம்

பெண்ணுரிமை பெண் சமூகம் பெண்களுக்கான பாதுகாப்பு சகலதையும் வழங்கக்கூடிய ஒரு நாடு, அப்படியாக இருந்தும் எங்களுக்கு கிடைக்கப்பெறுகின்ற கால அவகாசம் மிகவும் அதிகமாக இருக்கின்றது

உரிய வயதில் உரிய வேலை வாய்ப்புகளை தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன், என  அரசாங்கத்திடம் மேலும் கோரிக்கைகளை முன்வைத்ததுடன், இதில் பெரும்பாலான வேலையில்லா பட்டதாரிகளும் கலந்து கொண்டனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்