யாழ்ப்பாணத்தில் ஹெரோயினுடன் இளைஞன் கைது
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் – பொம்மைவெளி பகுதியில் ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் இன்றையதினம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 120 மில்லிக்கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கீழ் இயங்கும் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டு தற்போது யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளான்.
இதேவேளை சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்