யாழில் தம்பதியினர் கொலை (வீடியோ இணைப்பு)

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் வடமராட்சி கற்கோவளம், ஐயனார் கோவிலடி பகுதியில் இன்று புதன் கிழமை கணவன் மனைவி இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

வடமராட்சி கற்கோவளம் பகுதியை சேர்ந்த மாணிக்கம் சுப்பிரமணியம் (வயது – 53), மேரி (வயது – 54) என்பவர்களே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இருவரும் தாக்குதல் மூலம் கொல்லப்பட்டிருக்கலாம் என பிரதேச மக்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்பந்த அடிப்படையில் சலவை தொழிலில் ஈடுபடுபவரும் அவரது மனைவியுமே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், பருத்தித்துறை நீதிமன்ற நீதவான் நேரடியாக சம்பவ இடத்தை தற்போது பார்வையிட்டுக் கொண்டிருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.