
முல்லைத்தீவில் துப்பாக்கி ரவைகள் மீட்பு
முல்லைத்தீவு சிலாவத்தை தியோநகர் காட்டு பகுதியில் ஆயிரக்கணக்கான துப்பாக்கி ரவைகள் முல்லைத்தீவு பொலிஸார் நேற்று வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு சிலாவத்தை தியோநகர் காட்டு பகுதியில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதாக கடற்படையினருக்கு தகவல் கிடைத்ததையடுத்து கடற்படையினரும், முல்லைத்தீவு பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சோதனையிட்டு பார்த்தபோது உரப்பை ஒன்றில் கட்டப்பட்ட நிலையில் துப்பாக்கி ரவைகளை கண்டுபிடித்துள்ளனர்.
மீட்கப்பட்ட உரப்பையில் இருந்து 1,400 ரி56 ரக துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.
துப்பாக்கி ரவைகள் வெடிக்காத நிலையில் பழுதடைந்துள்ள நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.