முச்சக்கர வண்டியுடன் வேன் மோதியதில் 6 வயது சிறுமி மரணம்

காலி – எல்பிட்டிய, குருந்துகஹ நகரில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை முச்சக்கர வண்டி மற்றும் வேன் மோதி இடம்பெற்ற விபத்தில் 6 வயது குழந்தை  உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிடிகல பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமியே இவ்வாறு உயிர் இழந்துள்ளார்.

அம்பலாங்கொடையிலிருந்து எல்பிட்டிய நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி எதிர் திசையில் பயணித்த வேன் மீது  மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர், ஒரு ஆண் பயணி, இரண்டு பெண் பயணிகள் மற்றும் முச்சக்கர வண்டியில் பயணித்த மூன்று பெண் குழந்தைகள் காயமடைந்தனர்.

இந்தக் குழு எல்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது, இதில் ஒரு பெண் குழந்தை உயிரிழந்தது, மீதமுள்ளவர்கள் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து தொடர்பாக வேனின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் எல்பிட்டிய பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க