மீசாலை சோலை அம்மனுக்கு உத்தர குளிர்த்தி உற்சவமும் நீர் சோறு வழங்கல்

-யாழ் நிருபர்-

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் மீசாலை சோலை அம்மனுக்கு 3 ஆவது பங்குனி உத்தர குளிர்த்தி உற்சவமும் நீர் சோறு வழங்கலும் நேற்று திங்கட் கிழமை பக்திபூர்வமாக இடம்பெற்றது.

கருவறையில் வீற்றிருக்கு சோலை அம்மனுக்கு விஷேட, அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று எம்பெருமாட்டி உள்வீதியுடாக வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பின்னர் பக்தர்களுக்கு நீர்ச்சோறு வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது. கடந்த பங்குனி உத்தர குளிர்த்தி உற்சவம் கடந்த 18.03.2024 அன்று முதலாவது உற்சவத்துடன் ஆரம்பமாகி எதிர்வரும் நான்காவது பங்குனி உத்தர குளிர்த்தி உற்சவத்துடன் நிறைவடையும்.