மாடுகளைக் கடத்திய பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட மூவர் கைது

-யாழ் நிருபர்-

யாழ் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட மூவர் இன்று வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில் 8 மாடுகளைக் கடத்தும் பொழுது கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரும், மீட்கப்பட்ட மாடுகளுடன் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் புங்குடுதீவு பிரதேசத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வரும்பொழுது பண்ணையில் வைத்து யாழ்ப்பாண பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.