மன்னார் மாவட்டத்திற்கு பெருமை தேடிக் கொடுத்த 05 மாணவர்கள்

 

-மன்னார் நிருபர்-

 

மலேசியாவின் கோலாலம்பூரில் எதிர்வரும் 03.12.2023 அன்று நடைபெறும் சர்வதேச மனக்கணித போட்டியில் (UCMAS Abacus ) கலந்து கொள்வதற்காக மன்னார் மாவட்டத்தைச் சோ்ந்த 5 மாணவர்கள் மலேசியாவுக்கு செல்லவுள்ளனர்.

இப்போட்டியில் உலகில் 80 இற்கு மேற்பட்ட நாடுகளில் இருந்து மாணவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இப்போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப் படுத்தி கலந்துகொள்ளும் 60 மாணவர்களில் மன்னார் மாவட்டத்தைச் சோ்ந்த 5 மாணவர்கள் கலந்து கொள்வது மன்னார் மாவட்டத்துக்கு மிகவும் பெருமைக்குரிய விடயமாகும்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்