
மணல் ஏற்றி பயணித்த லொறி குடைசாய்ந்து விபத்து
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி பயணித்த லொறியை பொலிஸார் இன்று புதன்கிழமை துரத்தி சென்ற நிலையில் லொறி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
யாழ்ப்பாண நகர் பகுதியை நோக்கி மணல் ஏற்றி பயணித்த லொறியை பொலிஸார் வழிமறித்த போது, பொலிஸாரின் உத்தரவை மீறி, லொறியின் சாரதி மிக வேகமாக வானகத்தை செலுத்தி சென்றுள்ளார்.
லொறி நல்லூர் பின் வீதி வழியூடாக சென்று வீதி வளைவில் திரும்ப முற்பட்ட வேளை வேக கட்டுப்பாட்டை இழந்து, வீடொன்றின் மதிலை உடைத்து, வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதுடன் விபத்துக்குள்ளான லொறியின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்