
மட்டக்களப்பு – வாகரையில் மினி சூறாவளி
மட்டக்களப்பு – வாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிருமிச்சை பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை வீசிய மினி சூறாவளி காற்றினால் பல மரங்கள் முறிந்து வீழ்ந்ததுடன், 12 வீடுகள் சேதமடைந்துள்ளன.
மினி சூறாவளி காற்று வீசியதையடுத்து வீடுகளின் கூரை ஓடுகள், தகரங்கள் என்பன தூக்கி வீசப்பட்டதுடன், சில வீடுகள் முற்றாகச் சேதமடைந்துள்ளதாக வாகரை பிரதேச செயலாளர் ஏ.அருணன் தெரிவித்தார்.
எனினும் எவருக்கும் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை என தெரிய வந்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்