போலி நாணய தாள்களுடன் ஒருவர் கைது

மொரட்டுவை – எகொட உயன பகுதியில் போலி நாணயத் தாள்களை தம்வசம் வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 5,000 ரூபாய் பெறுமதியான 30 நாணய தாள்கள் மீட்கப்பட்டுள்ளன.

பொலிஸாருக்கு  கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.