பொம்மையோடு குடும்பம் நடத்தும் வங்காள இளைஞர்

இளைஞர் ஒருவர் பொம்மையைக் காதலித்து வரும் வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள சாகர்பாரா என்ற ஊரைச் சேர்ந்த வித்யுத் மண்டல் என்பவரே பொம்மையை தனது காதலியாக மாற்றிக்கொண்டுள்ளார். இந்த பொம்மைக்கு பிங்கி என்றும் பெயர் வைத்துள்ளார்.

சமீபத்தில் பக்ரீத் பெருநாளின் போது தனது பொம்மை காதலியோடு வித்யுத் பைக்கில் சென்ற வீடியோ இணையத்தில் பெரும் வைரலானது. இந்த பொம்மையை கடந்த அறு மாதங்களாக உயிருக்கு உயிராக காதலித்து வருவதாக இளைஞர் கூறியுள்ளார்.

மேலும் அவர் எங்கள் உறவுமுறை குறித்து மற்றவர்கள் குறை கூறுவதையோ, கிண்டல் செய்வதையோ, கேள்வி கேட்பதையோ நான் கண்டுகொள்வதேயில்லை. என்னைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைத்தாலும் எனக்கு கவலையில்லை எனவும் கூறியுள்ளார்.

இவர் பைக்கில் எங்கு சென்றாலும் தனது ‘காதலியையும்’ பின்னால் அமர்த்திக்கொண்டு கூடவே அழைத்துச் செல்வது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்