பேரனால் நிலை தடுமாறிய தாத்தா மரணம்

இரத்தினபுரியில் குடும்ப தகராறு காரணமாக காயமடைந்த நபர் எஹெலியகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார்.

பரகடுவ பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய முதியவரே இதன்போது உயிர் இழந்துள்ளார்.

சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,

உயிரிழந்தவர் தனது மகள் மற்றும் அவரது கணவருடன் வசித்து வந்துள்ளார். மகளின் கணவருக்கு முதல் திருமணத்தில் ஒரு மகன் இருந்ததாகவும், அவரும் அவர்களுடன் வீட்டில் வசித்து வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வீட்டின் உரிமை தொடர்பில் மகன் தந்தையுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதன்போது உயிரிழந்த நபர் தகராறில் குறுக்கிட்ட போது அவரது பேரனால் தள்ளிவிடப்பட்ட நிலையில் தரையில் விழுந்து காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை எஹெலியகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க