பாகிஸ்தானுக்காக பயன்படுத்தப்பட்ட பிரத்யேக ஆயுதங்கள் பயங்கரவாதிகளை அழித்த மூன்று சக்திகள் எவை?

பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்திருந்த பயங்கரவாதிகளை தாக்கி அழிக்க இந்தியா ராணுவமும், விமானப்படையும் சக்திவாய்ந்த ஸ்கால்ப் ஏவுகணை, ஹேமர் ரக குண்டுகள் மற்றும் கமிகாஷே டிரோன்கள் என 3 முக்கிய ஆயுதங்களை பயன்படுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

பகல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாத நிலைகள் மீது இந்தியா ‘ஆபரேசன் சிந்தூர்‘ என்ற பெயரில் தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. இதற்கு ரஃபேல் போர் விமானங்கள் மூலம் ஸ்கேல்ப் என்ற சக்திவாய்ந்த ஏவுகணைகள் வீசி இலக்கை தாக்கி அழித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

சுமார் 250 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட ஸ்கால்ப் ஏவுகணைகளை விமானத்தில் இருந்து தரையில் உள்ள இலக்குகளை நோக்கி செலுத்த முடியும். அதேபோல், பதுங்கு குழிகளையும், ஆயுதங்கள் சேமிக்கும் இடங்களுக்குள் புகுந்து அந்த ஏவுகணை துல்லியமாக தாக்குதல் நடத்தும் திறன் கொண்டது. எம்.பி.டி.ஏ என்ற ஐரோப்பிய நிறுவனம் தயாரித்துள்ள 1300 கிலோ எடை கொண்ட அந்த ஏவுகணையை மிரேஜ் 2000, ரஃபேல், எஸ்.யு. – 24 உள்ளிட்ட விமானங்களில் இருந்து ஏவ முடியும்.

பயங்கரவாதிகளின் இடங்களை தகர்த்த ஹேமர் ரக குண்டுகள் பிரான்சிடம் இருந்து வாங்கப்பட்டவை ஆகும். போர்விமானங்களில் இருந்து பாகிஸ்தானுக்குள் வீசப்பட்ட அந்த குண்டுகள் குறைந்த உயரத்திலும், ஆழமான பகுதியிலும் தாக்குதல் நடத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அனைத்து வானிலை நிலைகளிலும் முழுமையாக செயல்படும் அந்த குண்டுகளை ரஃபேல், மிராஜ் 2000D, F-16, தேஜாஸ் மற்றும் MiG-29 உள்ளிட்ட பல்வேறு போர் விமானங்களில் பயன்படுத்த முடியும். 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் திறனுடைய அந்த குண்டுகள் 250 கிலோ, 500 கிலோ, மற்றும் 1,000 கிலோ ஆகிய அளவுகளில் பயன்படுத்தப்படுகின்றன. பதுங்கு குழிகளையும் தகர்க்கும் வல்லமை இந்த குண்டுகளுக்கு உண்டு.

பாகிஸ்தான் மீதான தாக்குதலுக்கு இந்திய ராணுவம் “தற்கொலை விமானம்” என அழைக்கப்படும் கமிகாஷே என்ற டிரோனையும் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. எதிரிகளின் இலக்கை கண்டுபிடிக்கும் வரை வானில் பறக்கும் அந்த டிரோன்கள், கண்டுபிடித்ததும் அங்கே விழுந்து வெடித்துச் சிதறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. திட்டமிட்ட இலக்கை தானாக தாக்கி அழிக்கும் கமிகாஷே வகை டிரோன்கள், ரிமோட் மூலமும் கட்டுப்படுத்தப்படும்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்