பள்ளத்தில் கவிழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து: ஒருவர் பலி

பதுளை – ஹாலிஎல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹெதெக்ம பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் பதுளை பிரதேசத்தைச் சேர்ந்த 69 வயதுடையவர் ஆவார்.

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி வீதியை விட்டு பள்ளத்தில் கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது முச்சக்கரவண்டியின் சாரதியும் பின்புறத்தில் பயணித்த நபரொருவரும் படுகாயமடைந்துள்ள நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் முச்சக்கரவண்டியின் சாரதி சிகிச்சை பலனின்றி இன்று புதன்கிழமை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹாலிஎல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்