பல்வெறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது

பல்வெறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கல்கிஸ்ஸை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று வெள்ளிக்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்கிஸ்ஸை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் கொழும்பு கல்கிஸ்ஸை – ராஹுல வீதி பகுதியில் வைத்து சந்தேக நபர் 12 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் மொரட்டுவை பிரதேசத்தில் வசிக்கும் 31 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாரின் விசாரணையில், கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் மொரட்டுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இரண்டு வீடுகளின் கதவுகளை உடைத்து பெறுமதியான பொருட்களை திருடியுள்ளதாகவும், வாகனத்தில் இருந்த மடிக்கணினி மற்றும் டப் கணினி ஆகியவற்றை திருடியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

சந்தேக நபரிடமிருந்து மடிக்கணினி, 2 டப் கணினிகள் , தங்க மாலை, தங்க தோடுகள் மற்றும் 2 எரிவாயு அடுப்புகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.