
பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ள நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர்கள் ஒன்றியம்
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர்கள் ஒன்றியம் நாளை முதல் 24 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளது.
இதன்படி பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையினால் நோயாளிகளுக்கு ஏற்படும் சிரமத்திற்கு சுகாதார அமைச்சர் உட்பட அரசாங்கம் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என குறித்த ஒன்றியம் தெரிவித்துள்ளது