
தானசாலைகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பம்
எதிர்வரும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் அமைக்கப்படும் தானசாலைகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, தானசாலைகள் அமைக்கப்படும் பகுதியில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் பதிவு செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அந்த சங்கத்தின் செயலாளர் சமில் முத்துக்குட வலியுறுத்தியுள்ளார்.
குறித்த தானசாலைகளை எதிர்வரும் மே மாதம் 9 ஆம் திகதிக்கு முன்னதாக பதிவு செய்யுமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக, தானசாலைகள் தொடர்பாக விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் சமில் முத்துக்குட சுட்டிக் காட்டியுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்