தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் – அமெரிக்க தூதுவர் சந்திப்பு!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் , அமெரிக்க தூதுவர் யூலி சங்கிற்கும் இடையிலான சந்திப்பு இன்று புதன்கிழமை இடம்பெற்றது.

இதன்போது, இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்கள் எதிர்கொள்ளும் அரசியல் பொருளாதார சவால்கள் தொடர்பாக இதன் போது கலந்துரையாடப்பட்டது.

இலங்கையில் நிரந்தரமான அரசியல் தீர்வு ஏற்பட அமெரிக்காவின் தொடர்சியான பங்களிப்பின் முக்கியத்துவம் தேவையென எடுத்துரைக்கப்பட்டது, அதனுடன் பொருளாதார மேம்பாட்டுக்கான திட்டங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது, என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்