சுனாமி எச்சரிக்கை : கடற்கரை பகுதிகளை விட்டு வெளியேற உத்தரவு

சிலியில் சுனாமி எச்சரிக்கையை விடுக்கப்பட்டுள்ளது , சிலியின் தெற்கு பகுதியில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்திற்குப் பின்னர் இப்பகுதி மக்கள் ஒரு கடற்கரைப் பகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிலியின் தெற்கு முனையில் உள்ள தொலைதூர மாகல்லன்ஸ் பகுதிக்கு நாட்டின் பேரிடர் நிறுவனம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

அர்ஜென்டினாவின் உவாயா நகரின் கடற்கரையிலிருந்து 219 கிமீ (136 மைல்) தொலைவில் இன்று வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி 13.58 மணிக்கு 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.