சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கான விழிப்புணர்வு செயலமர்

மாகாண சுகாதாரத் துறை மற்றும் பிராந்திய சுகாதார அதிகாரிகள் அலுவலகங்களின் பிரதானிகள் மற்றும் அதிகாரிகளுக்கான கொள்முதல் குறித்த விழிப்புணர்வு செயலமர்வை கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர நேற்று வியாழக்கிழமை மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் நடத்தினார்.

இந்நிகழ்வில், ஆளுநரின் செயலாளர் ஜே.எஸ். அருள்ராஜ், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எச்.இ.எம்.டபிள்யூ.ஜி. திசாநாயக்க மற்றும் மாகாண சுகாதார பணியக மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க