சிறைச்சாலை வடிகானிலிருந்து துப்பாக்கி மீட்பு

கொழும்பு – வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள வடிகானிலிருந்து துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே இந்த துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கி பொறள்ளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொறள்ளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக சிறைச்சாலை ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்