சட்டவிரோதமாக வெட்டப்பட்ட 36 கிலோ மாட்டிறைச்சி அழிப்பு

-கிளிநொச்சி நிருபர்-

முல்லைத்தீவு – உடையார்கட்டு சந்தை பகுதியில் பொது சுகாதார பரிசோதகர் றோய்ஸ்ரன் றோய் தலைமையில் பொது சுகாதார பரிசோதகர்கள் சந்திரமோகன், கோகுலன், சுரேசானந்தன் ஆகியோர் பரிசோதனையில் ஈடுப்பட்டிருந்தனர்.

சந்தைபகுதிக்குள் அமைந்துள்ள மாட்டிறைச்சி கடையில் விற்பனை செய்யத்தயாராக இருந்த மாட்டிறைச்சி தொடர்பில் சந்தேகமடைந்த பொது சுகாதார பரிசோதகர்கள் கடையினை திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தினர்.

இதன்போது கொல்களத்தில் வெட்டியமைக்கான கொல்கள் பொது சுகாதார பரிசோதகரின் பற்றுச்சீட்டு இல்லாதமையை அவதானித்த பொது சுகாதார பரிசோதகர் றொய்ஸ்ரன் றோய், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 36 கிலோ இறைச்சியினை கைப்பற்றினர்.

மேலும் இறைச்சி கடை உரிமையாளரை விசாரணை செய்ததில் மாட்டிறைச்சி சட்டவிரோதமாக வெட்டப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, கைப்பற்றப்பட்ட மாட்டிறைச்சி 36 கிலோவும் பொது சுகாதார பரிசோதகர் றொய்ஸ்ரன் றோய் மற்றும் குழுவினரால் அழிக்கப்பட்டது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க