கோப், கோபா குழு தலைவர் பதவிகளை எதிர்க்கட்சிக்கு வழங்க கோரிக்கை

கோப் மற்றும் கோபா குழுக்களின் தலைவர் பதவிகளை எதிர்க்கட்சிக்கு வழங்குமாறு லக்ஷ்மன் கிரியெல்ல பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த பதவிகளை எதிர்க்கட்சிக்கு வழங்குமாறு இன்று வியாழக்கிழமை காலை ஆரம்பமான பாராளுமன்ற அமர்வின் போது எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் சபாநாயகர் எதிர்க்கட்சிகளுக்கு இந்த பதவிகளை வழங்குவதாக எழுத்து மூலம் உறுதியளித்ததாகவும் இது தொடர்பான நிலைமையை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.