
கொல்கத்தாவில் உள்ள விடுதியில் தீ பரவல்: 14 பேர் பலி
இந்தியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள கொல்கத்தா நகரில் உள்ள விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆறு தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் தீ அணைக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஊடகங்களில் வெளியான புகைப்படங்கள் மற்றும் காணொளிகள், ஹோட்டல் கட்டிடத்தின் ஜன்னல்கள் மற்றும் குறுகிய விளிம்புகள் வழியாக மக்கள் தப்பிக்க முயற்சிப்பதைக் காட்டுகின்றன.
மேலும் மாடியில் இருந்து பாய்ந்து தீயில் இருந்து தப்பிக்க முயன்ற ஒருவரும் கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறித்த சம்பவம் தொடர்பாக மன வேதனை அடைந்ததாக தனது உத்தியோகபூர்வ எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்