கைதிகளுக்கு இடையில் தகராறு: இருவர் காயம்
காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சில கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இரு கைதிகள் இன்று வியாழக்கிழமை காயமடைந்துள்ளனர்.
காலி மீட்டியாகொடை பிரதேசத்தில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நான்கு சந்தேக நபர்களில் இருவரே குறித்த தகராறில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த இரு கைதிகளும் பூஸா சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்