கட்டாக்காலி மாடுகளை கையகப்படுத்திய பிரதே சபை: உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல்

-அம்பாறை நிருபர்-

சம்மாந்துறையில் போக்குவரத்துக்கு இடையூறாக காணப்பட்ட கட்டாக்காலி மாடுகளை சம்மாந்துறை பிரதேச சபையினர் பொலிஸாருடன் இணைந்து நேற்று வியாழக்கிழமை கையகப்படுத்தியுள்ளனர்.

சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் கட்டாக்காலி மாடுகளினால் அன்றாடம் வீதி விபத்துக்கள் ஏற்படுவதுடன், பெறுமதியான பயிர் வகைகளும் சேதப்படுத்தப்படுவதாக பல்வேறு முறைப்பாடுகள் பிரதேச சபைக்கு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாடுகளுக்கு அமைய சம்மாந்துறை நகர் பிரதேசத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக காணப்பட்ட மாடுகள் நேற்று கையகப்படுத்தப்பட்டுள்ளது.

பிரதேச சபையினால் கட்டாக்காலி மாடுகளின் உரிமையாளருக்கு பல தடவைகள் அறிவுறுத்தல் வழங்கப்பட்டும் அவை கவனத்தில் கொள்ளாமையினால் குறித்த மாடுகளின் உரிமையாளர்கள் தண்டப்பணம் செலுத்தி தங்களது மாடுகளை கொண்டு செல்ல வேண்டும்.

மேலும் ஒரு நாளைக்கு பின் மாடுகளை பெற்றுக்கொள்ளாத உரிமையாளருக்கு பராமரிப்புச் செலவும் மேலதிகமாக அறவிடப்படும் எனவும் 3 நாட்களுக்குள் மாடுகளை உரிமையாளர்கள் பெறாவிட்டால் பொலிஸார் ஊடாக நீதிமன்றத்தில் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக பிரதேச சபை தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க