எரிவாயு நிரப்பு நிலையத்திற்கருகில் தீ விபத்து : பலி எண்ணிக்கை 11ஆக உயர்வு!
இந்தியா – ராஜஸ்தான் மாநிலத்தை அடுத்த ஜெய்ப்பூரில் எரிபொருள் நிலையத்திற்கருகில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.
இன்று வெள்ளிக்கிழமை காலை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு இரசாயனம் ஏற்றிச் சென்ற பாரவூர்தி ஒன்று மற்றுமொரு வாகனத்தின் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.
விபத்தில் 37 பேர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இன்று காலை ஐவர் உயிரிழந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை11 பேர் உயர்வடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன