உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் போதைப்பொருட்களுடன் கைது!

எதிர்வரும் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் போதைப்பொருட்களுடன் அலுபோமுல்ல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அலுபோமுல்ல பொலிஸாரால் பாணந்துறை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து ஐஸ் மற்றும் ஹெரோயின் ஆகிய போதைப்பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த பெறுமதி 13 இலட்சம் ரூபாவுக்கும் அதிகம் என பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் அலுபோமுல்ல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.