உயர்தர மாணவியின் தவறான முடிவு

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பாடசாலை மாணவி தற்கொலை செய்துள்ளார்.

புதுக்குடியிருப்பு – இரணைப்பாலை பகுதியில் வசிக்கும் நிதர்சினி (வயது – 18) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வீட்டில் பெற்றோர்கள், உறவினர்கள் இல்லாத நிலையில் குறித்த மாணவி தனது அறைக்குள் தன் உயிரை மாய்த்து கொண்ட நிலையில் பிரதேசவாசிகள், அயலவர்கள் இணைந்து குறித்த மாணவியினை மீட்டு புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும், அவர் உயிரிழந்து விட்டதாக வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

இவரது சடலம் புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இந்த உயிரிழப்பு தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றார்கள்.